Courtesy:www.warwithoutwitness.com

திருக்குறள் உங்கள் மொழியில் (Thirukural in Your Language)

Wednesday 28 December 2011

பழந்தமிழர் நேரக்கணக்கீடு (Units of time in ancient Tamil history )

  • 1 குழி (குற்றுழி)= 6.66 millisecond-the time taken by the Pleiades stars(aRumin) to glitter once.
  •  10 குழிகள் (குற்றுழிகள்)= 1 மை= 66.6666 millisecond-the time taken by the young human eyes to flap once.
  • 2 கண்ணிமைகள் = 1 கைநொடி= 0.125 second
  • 2 கைநொடிகள்= 1 மாத்திரை = 0.25 second
  • 6 மைகள் = 1 சிற்றுழி (நொடி)= 0.40 second-the time taken for a bubble (created by blowing air through a bamboo tube into a vessel 1 saaN high, full of water) to travel a distance of one saaN (சாண்).
  • 2 மாத்திரைகள் = 1 குறு = 0.50 second
  • 2 நொடிகள்= 1 வினாடி = 0.80 second-the time for the adult human heart to beat once
  • 212 நொடிகள்= 2 குறு = 1 உயிர் = 1 second
  • 5 நொடிகள்= 2 உயிர்= 1 சாணிகம் = 1/2 அணு = 2 seconds
  • 10 நொடிகள்= 1 அணு = 4 seconds
  • 6 அணுக்கள்= 12 சாணிகம் = 1 துளி = 1  நாழிகை வினாடி = 24 seconds
  • 10 துளிகள் = 1 கணம் = 4 minutes
  •  6 கணம் = 1 நாழிகை = 24 minutes
  • 10 நாழிகைகள் = 4  சாமம் = 1  சிறுபொழுது = 240 minutes= 4 hours
  •  6 சிறுபொழுதுகள் = 1 நாள் = 24 hours
  • 7 நாட்கள்= 1 கிழமை (1 week)
  • 15 நாட்கள்= 1 அழுவம் (1 fortnight )
  • 29.5 நாட்கள் = 1 திங்கள் (1 lunar month)
  • 2 திங்கள்= 1 பெரும்பொழுது (1 season)
  • 6 பெரும்பொழுதுகள் = 1 ஆண்டு (1 year)
  • 64 ஆண்டுகள் = 1 வட்டம் (1 cycle)
  • 4096(=8^4) ஆண்டுகள் = 1 ஊழி (1 epoch)

Tuesday 20 December 2011

ஆனந்த விகடன்- தலையங்கம் : கவனம் தேவை - கேரளத்து யானையே..!

சட்டபூர்வமாக காய்கறியில் தொடங்கி, சட்ட விரோதமாக அடிமாடு வரையில் அத்தனைக்கும் தமிழ்நாட்டையே நம்பி இருக்கும்போதும், ஓர் இடைத்தேர்தலுக்காக முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தேவை இல்லாத பீதியையும் பதற்றத்தையும் மக்களிடையே ஏற்படுத்தி, அவர்களைத் தமிழ்நாட்டின் எதிரிகளாக உசுப்பிவிடும் வேலையில் இறங்கி இருக்கிறது கேரளத்து அரசியல் கூட்டம்!

தமிழ்நாட்டில் இருந்து தங்கள் மாநிலத்துக்குள் வரும் பதின்மூன்று சாலைகளுமே தங்கள் அடிப்படை ஜீவாதாரத்துக்கான ரத்த நாளங்கள் என்பது நன்றாகத் தெரிந்திருந்தும், அத்தனை பாதைகளையும் தாங்களே அடைத்துக்கொள்ளும் அளவுக்கு, கண்றாவி அரசியல் அவர்களின் கண்களை மறைத்திருக்கிறது!

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கரிகால் சோழன் எழுப்பிய கல்லணை இன்றைக்கும் காட்டி நிற்கும் கட்டுக்குலையாத கம்பீரம்தான், நூற்றுச் சொச்சம் வருடங்களுக்கு முன் வெளிநாட்டு பென்னி குயிக் இந்த அணையைக் கட்டுவதற்கான அஸ்திவாரம் என்பதை எத்தனை உரக்க எடுத்துச் சொன்னாலும், கேரளத்துச் சூழ்ச்சியாளர்களின் காதில் அது விழத்தான் செய்யாது. அப்படி விழுந்துவிட்டால், பிறகு எப்படி நடக்கும் அவர்களின் தரங்கெட்ட தேர்தல் பிழைப்பு?

ஓங்கி உயர்ந்த மேற்குத் தொடர்ச்சி மலை பூகோளரீதியாகப் பிரித்தபோதும், எல்லையே இல்லாத அன்போடு தமிழ் மக்களுடன் ஒட்டி உறவாடும் மலையாள மக்கள் இதை நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும். முல்லைப் பெரியாறு அணை மூலம், இல்லாத பொல்லாத விரிசலை உண்டாக்கி, மடுவை மலையாக்கிக் காட்டும் இந்தச்சூழ்ச்சியின் பின்னால் உள்ள சுயநலத்தை அவர்கள் நன்றாக உணர்ந்துகொள்ள வேண்டும்.

தண்ணீரால் தமிழனின் தாகம் தீருவதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல், விவசாயிகளின் வாழ்க்கை சுபிட்சத்தைச் சகிக்க முடியாமல், பிழைப்பில் மண் அள்ளிப் போடுவதில் அற்ப சுகம் காண நினைத்தால்... அது கேரளத்து யானை தன் தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்ட கதையாகத்தான் முடியும்!

சிறுபுத்தித் தலைவர்களுக்கு வேண்டுமானால் அந்த அரசியல் அரிப்பு இருந்துவிட்டுப் போகட்டும். ஆதரவு காட்டும் தமிழகத்தோடு, அப்பாவி மக்களுக்கு வேண்டாம் பகை!

அதே சமயம், தமிழக அரசியல் தலைவர்களுக்கு ஓர் அவசர வேண்டுகோள்...

அதர்மமே என்றாலும், அதிலும் ஒன்றாகச் சேர்ந்து நிற்கும் கேரளத்துத் தலைவர்களிடம் இருந்து நீங்கள் இப்போதாவது பாடம் கற்றுக்கொள்ளுங்கள். தற்காலிகமாகவேனும் உங்கள் கட்சிப் பேதங்களை மூட்டைக் கட்டிவைத்துவிட்டு, ஒருமித்த குரலோடு டெல்லியை முற்றுகை இடுங்கள். கேரளத்தை ஆள்வதும் காங்கிரஸ்தான் என்ற சுயநலத்தாலோ என்னவோ, மத்திய அரசு காட்டும் மௌனத்தைக் கலைக்கப் போராடுங்கள்!

ஏழு கோடி மக்களின் எழுச்சிக் குரலை நீங்கள் அங்கே ஒற்றுமையோடு எதிரொலிப்பதன் மூலம்தான், தூங்குவதுபோல் நடிக்கும் மத்திய அரசைத் 'தட்டி' எழுப்ப முடியும். தமிழனின் தர்ம யுத்தமும் அப்போதுதான் ஜெயிக்கும்!

Thursday 8 December 2011

Wednesday 7 December 2011

தமிழர் வரலாறு - கி.பி. 1 - கி.பி.- 1742

கி.பி. 1 - 20

சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் ஆட்சி, கோவூர் கிழார், தாமப்பல் கண்ணனார், ஐயூர் முடவனார், ஆவூர் முழங்கிழார், ஆலத்தூர் கிழார், மற்றோக்கத்து நப்பசலையார், இடைக்காடனார், ஆடுதுறை மாசத்தனார், வெள்ளைக்குடி நாகனார் வாழ்ந்த காலம்.

கி.பி. 10

உலக மக்கட்தொகை 170 மில்லியன். இக்காலத்து இந்தியா (எனக்கூறப்படும்) மக்கட்தொகை 35 மில்லியன்.

கி.பி. 21 - 42

குராப்பள்ளி துஞ்சிய பெருந் திருமாவளவன் ஆட்சி. சேரன் கூட்டுவன் கோதை, காரிகிழார், வெள்ளியம்பலத்துத், துஞ்சிய பெருவழுதி ஆகியோரின் காலம்.

கி.பி. 42 - 100

சோழன் செங்கணான், சோழன் நல்லுருத்திரன் ஆகியோரின் ஆட்சி. பாண்டியன் நன்மாறன் கலித்தொகையைத் தொகுத்தான், சேரமான் கணக்காலிரும்பொறை, இளங்கண்டிரக்கோ, இளவிச்சிக்கோ, கோக்கோதைமார்பன், குமணன், பெருஞ்சித்திரனார், பொய்கையார், மருத்துவன், தாமோதரன், நக்கீரனார், கீரன் சாத்தனார், பாண்டியன் இலவந்திகைப்பள்ளி துஞ்சிய நன்மாறன் ஆகியோரின் அற்புதகாலம்.



கண் இமையின் கட்டமைப்பு திட்ட வரைவு- ஐரோப்பிய வகையும் (இடம்) மங்கோலிய வகையும் (வலம்) குறுக்கு வெட்டும் நேர் தோற்றமும். பெல்ஸின் ( bellz ) படி மார்ட்டின் ( martin,1928 ) செய்த உருமாற்றம்.

கி.பி. 53

ஏசுநாதரின் தூதவரில் ஒருவரான செயின்ட் தாமஸ் இக்கால சென்னையில் மறைவு.

கி.பி. 101 - 120

பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன் ஆட்சி.

கி.பி. 105

சைனாவில் காகிதம் கண்டுபிடிக்கப்பட்டது.

கி.பி. 107

ரோமப்பேரரசு அளவிற் மிகபெரியதான காலம்.

கி.பி.120-144

ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் ஆட்சி. மூவேந்தர்கள் எதிர்த்தனர், ஆதிக்கும்ப கல்வெட்டு மூலம்.

கி.பி.145-175

வெற்றிவேற்செழியன் ஆட்சி. சிலப்பதிகாரக் கதை நடைப்பெற்ற காலம் கண்ணகிக்குக் கோயில் எடுத்தான் சேரன் செங்குட்டுவன். இலங்கை மன்னன் கயவாகு, சோழன் மாவண்கிள்ளி வாழ்ந்த காலம்.

கி.பி.175-200

கடைக்கழக இலக்கியங்கள் தொகுத்து வழங்கப்பட்டன. நற்றிணை (மாறன் வழுதி)- ஐங்குறுநூறு ( சேரன் யானைகட்சேய்) குறுந்தொகை (பூரிக்கோ- பாண்டியன்-உக்கிரப்பெருவழுதி)

மனிதனுடைய மயிரின் நிறமும் விழித்திரையினதும் தோலினதும் நிறம், கன்களின் வடிவம் ஆகியவற்றின் முக்கிய வகைகள்: பல்வேறு நிறங்கள் கொன்ட மயிர்கள், விரைப்பானவை(மேலே இடம்), சுருட்டையானவை (மேலே வலம்), அலை படிந்தவை; கண் வெளிறியது, கலப்பு நிறம் உள்ளது, கருமயானது (கரு விழியில் மங்கோலிய வகையினரிடமும் புக்ஷ்மன்களிடமும் காணப்படும் இமையோர மடிப்பு காட்டப்பட்டிருக்கிறது); வெளிறியதும், இடைப்பட்டதும், ஆழ் நிறம் உள்ளதுமான தோல்.



கி.பி.180

இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் எழுதினார்.

கி.பி.200

இக்கால கம்போடியாவிலும், மலேசியாவிலும் தமிழ் அரசு.

கி.பி.250-275

வரகுண பாண்டியன் ஆட்சி

கி.பி.275-300

மாணிக்கவாசகர் காலம்.

கி.பி.300-700

தமிழகத்தின் தென்பகுதி களப்பிரகர்களின் ஆட்சி.

கி.பி.300-700

தமிழகத்தின் வடபகுதி பல்லவர்களின் ஆட்சி, பல்லவமன்னர்கள் விசுணுகோபன், முதலாம் சிம்மவர்மன், இரண்டாம் சிம்மவர்மன், சிம்மவிசுணு ஆகியோரின் ஆட்சி.

கி.பி.358

துருக்கியைச் சேர்ந்த அன்ஸ் எனும் பெரும் போர் வீரன் ஐரோப்பா நாடுகளைப் படை எடுத்து வெற்றி கண்டான்

கி.பி.400

மனுதர்மம் அமைக்கப்பட்டது.

கி.பி.419

பெருநாட்டில் 150 அடி ஆதவன் கோவில் அமைத்தனர்.

கி.பி.450-535

தெற்கில் போதிதர்மர் காலம்.

கி.பி.570-632

முகமது நபிநாயகம் இஸ்லாமிய மதம் ஏற்படுத்தல். உருவ வழிபாடு இன்மை. ஒரே கடவுள் அல்லா என்ற தத்துவம்

கி.பி.590-631

சைவ நாயனார் திருநாவுக்கரசர் காலம். 312 திருமறைப்பாடல்களை இயற்றினார். இவரை அப்பர் என்றும் அழைப்பர்.

கி.பி.600-900

வைணவ ஆழ்வார் காலம். 4000 பாடல் கொண்ட நாலாயிர திவ்விய பிரபந்தம் தொகுக்கப்பட்டது.

கி.பி.610

நபி நாயகம் இஸ்லாமிய கருத்துக்களை கூறல். நபி நாயகம் 622ல் மெக்கா தப்பிச் செல்லல்.

கி.பி.630-644

சைன திரு உலாப்பயணி யுவான் சுவாங் பயணம்.


தலைத் தோலின் ஊடாக வெட்டுக்கள்.இடம்- சுருட்டை மயிருடன்.வலம்- நேர் மயிருடன்
படங்களின் ஓரங்களில் அதே மயிர்களின் குறுக்கு வெட்டுக்கள்.

கி.பி.641-645

அராபிய முகமதியர் எகிப்த், மெசபடோமியா, பெர்சியா நாடுகளைக் கைப்பற்றினர்.

கி.பி.650

திருஞான சம்பந்தர் காலம். 384 பாடல்களை கொண்ட திருமறையை இயற்றினார்

கி.பி.788

ஆதிசங்கரர் தோற்றம் (788-820) விவேக சூடாமணி இயற்றினார்.

கி.பி.800

இரண்டாம் அவ்வையார் அவ்வை குறள் இயற்றினார். நம்மாழ்வார் பெரும் வைணவ முனி. காரைக்கால் அம்மையார் 63 நாயன்மார்களில் ஒருவர். ஆண்டாள் கிருட்டிணன் பற்றிய பாடல்களை பாடியவர். பக்திமார்க்கம், புத்த மதம் தமிழ்நாட்டில் பரவுவதை தடுத்தது. கெளதம புத்தரை ஒன்பதாவது அவதாரமாக்கினர்.

கி.பி.825

சுந்தரர் நாயன்மார்களில் ஒருவர். இப்போதைய தென் ஆற்காட்டில் தோன்றினார். 38,000 சிவப்பாடல்களை எழுதியுள்ளார். தற்போது 100 பாடல்கள் கிடைத்துள்ளன. இவை திருமறை ஏழாவது புத்தகத்தில் சேர்ந்துள்ளன.

கி.பி.850

மாணிக்கவாசகர் தோற்றம். திருவாசகம் திருபள்ளி எழுச்சி, திருவெம்பாவை இவரது நூல்கள். வைணவர்களின் சமயக்கட்சி தமிழ்நாட்டில் ஆரம்பம்.

கி.பி.900

குண்டலினி யோகப் பயிற்சி மட்ஸ்சிந்தர நாதர் காலம்.



பத்கூம் மண்டையோட்டு முகடு (இடப்புற, நேர், மேலிருந்து தோற்றம்).

கி.பி.900

இந்தோனேசிய பேரரசு புத்தமதம் விடுத்து சைவத்தை ஆதரித்தது. 150 சைவக்கோவில்கள் கட்டப்பட்டன.

கி.பி.1000

உலக மக்கட் தொகை 256 மில்லியன். (இக்காலத்து கூறப்படும்) இந்தியா மக்கட்தொகை 79 மில்லியன்

கி.பி.1000

சிகாண்டிநேவியாவைச் சேர்ந்த கடற் பயணிகள் வட அமெரிக்காவிலுள்ள நோவகோசியா அடைந்தனர்.

கி.பி.1000

பாலிநேசிய இனத்தவர் நியுசிலாந்துவை அடைந்தனர் உலகில் அதிக அளவில் பரவியுள்ளவர்கள்.

கி.பி.1000

துருக்கிய முகமதியர்கள் ஆப்கானித்தானம் பெசாவர் வழியாக இக்கால இந்தியாவில் முதல் முறையாக நுழைந்தவர்கள். முதலாவது ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர்.

கி.பி.1010

சைவ நூற்தொகுப்பு திருமறை நம்பியாண்டார் நம்பி அவர்களால் தொகுக்கப்பட்டது.

கி.பி.1017-1137

தமிழ்ச் சித்தாந்தி இராமனுசர் காலம். பக்தி மார்க்கம் கடைப்பிடிக்கப்பட்டது.

கி.பி.1024

முகமது கஜினி சோமநாதபுரம் கோவிலை அழித்தான்.

கி.பி.1040

சைனர்கள் திசை அறி கருவி கண்டுபிடித்தனர்.

கி.பி.1150

வீர சைவர் தலைமை மேற்கொண்டு பசுவண்ணா, மனிதநேயம், மனிதர்களிடையே சம நிலை, சிவலிங்க வழிபாடு இவற்றை போதித்தார்.

கி.பி.1197

நாலந்தாவில் புத்தசமய பல்கலைக்கழகம் முகமதியரால் அழிக்கப்பட்டது.

கி.பி.1230-60

ஒரிசாவில் கொனர்க்கில் சூரியன் கோவில் கட்டப்பட்டது.

கி.பி.1232

போசள வீர நரசிம்மன் காவிரிக்கரையில் மகேந்திரமங்கலத்தில் பாண்டியர்களையும், காடவ கோப்பெருஞ்சிங்கனையும் தோற்கடித்து, மூன்றாம் இராசராசனை விடுவித்து சோழ நாட்டை மீட்டு சோழரிடம் ஒப்படைத்தான். போசளர்கள் திருச்சிக்கு அருகாமையில் கண்ணூர் கொப்பத்தில் துணை தலைநகரை உருவாக்கினார்.

கி.பி.1250

சைவ சித்தாந்தி மெய்கண்டார் காலம்.

கி.பி.1268-1369

தமிழ் அறிஞர் வேதாந்த தேசிகர் காலம். வடகலை வைணவத்தை காஞ்சியில் அறிமுகப்டுத்தினார்.

கி.பி.1272

மார்க்கோ போலோ தற்போதைய இந்தியா வந்தார்.

கி.பி.1296

அலாவூதின் கில்ஜி பெரும்பாலான தற்போதைய இந்தியாவை தன் ஆட்சியில் கொண்டுவந்தார். அவருடைய தளபதி மாலிக்கப்பூர் இராமேசுவரம் வரை படை எடுத்து வென்றார்.

கி.பி.1300

கன்யாகுமரியில் முகமதிய மசூதி அமைக்கப்பட்டது.

கி.பி.1311

தமிழ்நாட்டில் முகமதியர் ஆட்சி வேரூன்றியது.

கி.பி.1333-1378

மதுரை ஒரு சுதந்திர சுல்தானியப் பகுதியாக முகமதியர் ஆட்சியில் இருந்தது, முகமதியர்களின் வெற்றியைக் கண்டு கொதித்த இந்துக்கள் தக்காணத் தின் கிழக்கில் புரலாய நாயக்கனும், கபாய நாயக்கனும் குறிப்பிடத்தகுந்தவர்கள்.

கி.பி.1340

போசள மன்னன் மூன்றாம் வல்லாலன் காலத்தில் மதுரை சுல்தான் சலாவுதீன் அசன்சாவை கொன்றான்.

சம்புவராயர்கள்

சோழர் காலம் தொட்டு 16ஆம் நூற்றாண்டு வரை ஒமாயநாட்டு (திண்டிவனம்) மூன்னூற்றுப்பள்ளியை ஆண்டு வந்தார்கள். பிற்காலத்தில் ஆற்காட்டு மாவட்டங்களையும் செங்கட்பட்டு மாவட்டத்தையும் உள்ளடக்கி இராஜகம்பீர இராச்ஜியம் என்ற பெயரில் ஆன்டனர். விருச்சிபுரத்தை இருக்கையாகக் கொண்டிருந்தனர். பிற்காலச் சோழர்களுக்கு உட்பட்டிருந்தனர். சோழர்கள் படையில் சிறந்த பணி ஆற்றி உள்ளனர். அழகிய சிங்கன், இராஜராஜசம்புவராயன், திருபுவனவீரசம்புவராயன் அழகிய சோழசாம்புவராயன் அத்திமல்லன், வீரப்பெருமாள், எடிதிலி சம்புவராயன், இராஜகம்பீர சம்புவராயன் ஆகியோர் சம்புவராயர்களின் ஆரம்ப கால அரசர்கள்.

கி.பி.14

இந்த நூற்றாண்டின் துவக்கத்தில் ஏற்பட்ட முகமதியர் படையெடுப்பு பாண்டியனை ஒழித்தது முகமதியர் படையெடுப்பு பின்போது மூன்றாம் வீரவல்லாலன் சம்புவராயர்களைத் தமிழகத்தின் வடக்குப் பகுதியில் காவலர்களாக நிறுத்தினார். சம்புவராயர்கள் தமிழையும் தமிழ்க் குடியினரையும் பெரிதும் பேணியுள்ளார்கள் இரட்டைப்புலவர்கள் இவர்களுடைய ஆதர்வு பெற்றவர்கள். இவர்களின் நாணயங்கள் " வீரசெம்பன் குளிகைகள்" என அழைக்கப்பட்டன. தமிழர்களுக்கு புகலிடங்கள் அமைத்துக் கொடுத்தனர். "அஞ்சினான் புகலிடங்கள் அமைத்தார்கள்".

கி.பி.1336

விஜய நகர அரசு(1336-1646) தொடர்ந்தது.

கி.பி.1336

அரிகரன் விஜயநகரஅரசை நிறுவினான். அரிகரனின் தம்பியும் துணையரசனுமாகிய புக்கன் முகமதியர்களுக்கு எதிராக போர் செய்தான். கம்பணன் தமிழகம் உள்ளிட்ட தென்மண்டலத்தில் விஜயநகரத்தின் மகாமண்டலேசுவரனாக விளங்கினான். விஜயநகர ஆட்சிகாலத்தில் - தெலுங்கு பிராமணர்கள் தமிழகம் வந்தனர். துளுநாட்டைச் சேர்ந்த வேளாண். தொழில் செய்த ரெட்டியார்களும் வந்தனர். செளராட்டிரர்களும் குஜராத்திலிருந்து வந்தனர். வருணாசிரமம் வழியுறுத்தப்பட்டது. போர்த்துகீசியர்கள் வழி வந்த கிறித்துவத் துறவிகள் தமிழகத்துக் கடலோர பகுதிகளில் சமயப்பணி ஆற்றினார். சிற்றம்பர் நாடிகள் என்ற புலவரும், இரட்டைப்புலவர்களும், காலமேகப்புலவரும் இக்காலத்தில் வாழ்ந்தனர். 15 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும்
16 ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலும் கிருட்டிண தேவராயர் புலவர்களின் புரவலராக இருந்தார்.

கி.பி.1336

விஜய நகர அரசு (1336-1646) தொடர்ந்தது.

கி.பி.1337

உலகம் முழுமையும் பிளேக் நோய் பரவி 75 மில்லியன் மக்கள் உயிர் கொள்ளை கொண்டது.

கி.பி.1350

தென்னிந்திய சித்தாந்தி அபிய திக்தத்திரர் காலம். சைவ, வைணவ வேற்றுமை அகற்ற பெரு முயற்சி எடுத்தவர்.

கி.பி.1440

ஜெர்மனியில் அச்சடிக்கும் இயந்திரம் சோகன்ஸ் கட்டன்பர்க் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.

கி.பி.1469-1538

சீக்கிய மதம் கண்ட குரு நானக் காலம்

கி.பி.1492

கிரிசுடோபர் கொலம்பஸ் இந்தியாவை கண்டுபிடிக்க எண்ணி சேன் செல்வி டோர் சென்று வட அமெரிக்காவைக் கண்டுபிடித்தார்.

கி.பி.1498

போர்த்துக்கல்லைச் சேர்ந்த வாசுகோடா காமா கடல் வழி முதன் முதலாக கல்கத்தா வந்து சேர்ந்தார்.

கி.பி.1500

திருப்புகழ் இயற்றிய தமிழ்ச் சித்தாந்தி அருணகிரிநாதர் காலம்.

கி.பி.1500

புத்த சைவ அரச குமாரர் சாவா விலிருந்து படையெடுத்து வந்த முகமதியர்களால் வெளியேற்றப்பட்டார்.

கி.பி.1500

உலக மக்கள் தொகை 425 மில்லியன். தற்போதைய இந்திய மக்கள் தொகை 105 மில்லியன்.

கி.பி.1509

தமிழகத்தில் கிருட்டிணதேவராயர் ஆட்சி.

கி.பி.1510

போர்த்திகீசிய கத்தோலிக்கப் பாதிரியார் வருகை. ஐரோப்பியர் வருகை ஆரம்பம்.

கி.பி.1546

நாயக்கர்கள் ஆட்சி, விசய நகர ஆட்சிக்குப்பின்னர் இடைப்பட்ட காலத்தில் சூரப்ப நாயக்கரும், கிருட்டிணப்ப நாயக்கரும் ஆண்டனர்.

கி.பி.1565

விஜய நகர ஆட்சி முகமதியர்களால் அழிக்கப்பட்டது. முழுமையான மறைவு 1646ல் அமைந்தது.

கி.பி.1595

ஆயிரம் தூண்கள் கொண்ட சிதம்பரம் கோவில் அரங்க வேலை ஆரம்பிக்கப்பட்டு 1685ல் முற்று பெற்றது. சைவ சித்தாந்த விளக்க நூற்கள் தோன்றின. சூரியனார் மடத்தின் தலைவர் சிவாக்கிர யோகிகள் சிவஞான போதத்துக்கும், சிவஞான சித்தியாருக்கும் உரைநூற்கள் எழுதினார்.

கி.பி.1601

கிழக்கிந்திய கம்பெனி நிறுவப்பட்டது. ஆங்கிலக்கிழக்கிந்திய கம்பெனியர் சென்னை, கல்கத்தா, பம்பாய், ஆகிய இடங்களை தலைமையிடமாகக் கொண்டு 17 நூற்றாண்டு முற்பகுதியில் நாட்டு அரசியலில் ஈடுப்பட்டு ஆதிக்கத்தைப் பரப்பினர். 18 - ஆம் நூற்றாண்டின் நடுபகுதி வரை ஐரோப்பிய கம்பெனியர்கள் இந்தியாவில் அரசியல் ஆதிக்கத்தில் எவ்வித முன்னேற்றமுல் அடையவில்லை.

கி.பி.1619

யாழ்ப்பாணத் தமிழ் அரசு போர்த்துகீசியர்களால் கைப்பற்றப்பட்டது. 1658 வரையும் ஆதிக்கம் செலுத்தினர், பல ஆலயங்கள் அழிக்கப்பட்டன

கி.பி.1619

அமெரிக்காவில் முதன் முதலாக ஆப்பிரிக்கர்கள் அடிமையாக விற்கப்பட்டனர்.

கி.பி.1623-1659

திருமலை நாயக்கர் ஆட்சி. அரப்பணிகளும் கலைப்பணிகளும் அவருடைய புகழை வளர்த்தன. அழகிய தெப்பக்குளம், புதுமண்டபம், ஆவணிமூலை, இராயர் கோபுரம் - நாயக்கர்களால் கட்டப்பட்டன. 17 - ஆம் நூற்றாண்டில் எல்லப்பநாவலர் அருணாசலபுராணம், அருணைக் கலம்பகம், எழுதி சிவ எல்லப்ப நாவலர் என புகழ்பெற்றார். திருமலை நாயக்கனின் விருப்பப்படி மீனாட்சி அம்மைப் பிள்ளைத் தமிழைப் படைத்தார். காசியில் காசி மடம் எழுப்பினர். நாயக்கர் காலத்தில் முத்துத் தாண்டவர் - தமிழில் பல அற்புதமான கீர்த்தனைகள் இயற்றினார். பல அமிர்தக்கவிராயர், சர்க்கரைப்புலவர் என்போரும் குறிப்பிடத்தக்கவர்கள். இரத்தின கவிராயர் - மச்ச புராணம் எழுதினார்.

நாயக்கர் கால இலக்கியங்கள் பொற்கொல்லர் வீரகவிராயர் - இசை கலந்த நடையில் அரிச்சந்திரபுராணத்தை படைத்தார்.

அதிவீர ராமபாண்டியன், நளனின் துன்பியில் வரலாற்றை நைடதம் நூலாக்கினான் இலிங்க புராணம், மகா புராணம், கூர்ம புராணம் கரிவலம் வந்த நல்லூர் சிவனைப்போற்றி பதிற்றுப்பத்து, அந்தாதி இலக்கயம் போன்றவையும் எழுதினார். அதிவீரராம பாண்டியனின் தம்பி வராத்துங்க ராம பாண்டியன் எழுதிய உடலுறவு இன்ப விளக்கநூல் - கோக்கோகம். இவர்கள் பாண்டிய அரசக்குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

கி.பி.1627-1680

மராட்டிய மன்னன் சிவாஜியின் காலம். முகமதியர் ஆட்சிகளை வெற்றிக்கொண்டு மராட்டிய ஆட்சியை விருவுப்படுத்தினார்.

கி.பி.1628 - 1688

திருவைகுந்தத்தில் பிறந்த சைவ சித்தாந்தி குமர குருபரசாமிகள் கலிவெண்பா, கயிலைக் கலம்பம் படைத்தார்.

கி.பி.1650

சைவ மடமான தரும புரம் ஆதீனம் குரு ஞானசம்பந்தரால் மாயவரம் அருகில் அமைக்கப்பட்டது.

கி.பி.1676 - 1856

சிவாஜி தஞ்சையிலிருந்து சுல்தானிய ஆதிக்கத்தை ஒழித்ததுடன், 1677ல் தஞ்சையை மராட்டியர்களின் கீழ் கொண்டு வந்தார், விஜய நகரத்தின் வீழ்ச்சிக்கு பிண் மராட்டிய அரசு தோன்றியது. முகமதியர் அரசுகளை நசுக்கி முன்னேறியது. தஞ்சையை மராட்டியர்கள் ஆண்டனர். தமிழ்புலவர்களுக்கு அரசின் ஆதர்வு இல்லை. திருவாரூர் வைத்தியநாத்தேசிகர், வேதாரண்யம் தாயுமானவர், சுவாமிநாததேசிகர், சீர்காழி அருணாசலக் கவிராயர் (தமிழில் பல கீர்த்தனைகள் அமைத்த இசையறிஞர்) ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இரன்டாம் சரபோசி மன்னர் சரஸ்வதி மகாலைக் கட்டினார்.

கி.பி. 1677

விஜய நகர பேரரசின் கடைசி வாரிசான ஸ்ரீரங்கனுடன் நாயக்கர் ஆட்சி முடிந்தது.

கி.பி. 1682-1689

அரங்க கிருட்டிண முத்துவீரப்பன் பதவிக்கு வந்தார். இவருடைய காலத்தில் கிருத்துவ துறவி ஜான்-டி-பிருட்டோ மதுரை பகுதியில் சமயத் தொண்டாற்றினார்.

கி.பி. 1688-1706

இராணி மங்கம்மாவின் காலம். உய்யக்கொண்டான் வாய்க்காலை செப்பனிடச் செய்தார். குளம் வெட்டி வளம் பெருக்கிட சாலைகளும் சோலைகளும், அன்னச்சாவடிகள், சத்திரங்கள், தண்ணீர்ப்பந்தல்கள் அமைத்தார். சமய சார்பற்ற குடிநலம் பேணினார். மதுரை பொற்றாமரைக் குளத்தின் அருகில் கல்யாண மண்டபத்தில் நினைவுச் சின்னமாக அவருடைய உருவம் ஓவியமாக உள்ளது. 'மங்கம்மாள் மலைமேற் சோலை' எனப் பாராட்டப் பட்டுள்ளது.

கி.பி. 1700

உலக மக்கட்தொகை 610 மில்லியன். தற்போதைய இந்திய மக்கட் தொகை 165 மில்லியன்.

கி.பி. 1705-1742

தமிழ் சைவ சித்தாந்தியும் கவியுமான தாயுமானவர் திருச்சிராப்பள்ளியில் வாழ்ந்த காலம். தாயுமானவர் பாடல்கள் பக்தி மார்க்கம் வழியானவை.

External Links
1- http://www.aruvams.com/2011/07/14.html
2- http://www.tamilkalanjiyam.com/tamil_world/thamizhar_history/thamizhar_history.html

தமிழர் வரலாறு - கி. மு.14 பில்லியன் -கி.மு. 4



History of Tamil Script

Tuesday 6 December 2011

முகத்தல் அளவு/பெய்தல் அளவு (Volume)

முகத்தல் அளவு

5 செவிடு - 1 ஆழாக்கு
2 ஆழாக்கு - 1 உழக்கு
2 உழக்கு - 1 உரி
2 உரி - 1 படி
8 படி - 1 மரக்கால்
2 குறுணி - 1 பதக்கு
2 பதக்கு - 1 தூணி

பெய்தல் அளவு

300 நெல் - 1 செவிடு
5 செவிடு - 1 ஆழாக்கு
2 ஆழாக்கு - 1 உழக்கு
2 உழக்கு - 1 உரி
2 உரி - 1 படி
8 படி - 1 மரக்கால்
2 குறுணி - 1 பதக்கு
2 பதக்கு - 1 தூணி
5 மரக்கால் - 1 பறை
80 பறை - 1 கரிசை
48 96 படி - 1 கலம்
120 படி - 1 பொதி

பண்டங்கள் நிறுத்தல் (Weighing of Commodities)

பண்டங்கள் நிறுத்தல்

32 குன்றிமணி - 1 வராகனெடை
10 வராகனெடை - 1 பலம்
40 பலம் - 1 வீசை
6 வீசை - 1 தூலாம்
8 வீசை - 1 மணங்கு
20 மணங்கு - 1 பாரம்

பொன்நிறுத்தல் (Weighing of Gold))

பொன்நிறுத்தல்

4 நெல் எடை - 1 குன்றிமணி
2 குன்றிமணி - 1 மஞ்சாடி
2 மஞ்சாடி - 1 பணவெடை
5 பணவெடை - 1 கழஞ்சு
8 பணவெடை - 1 வராகனெடை
4 கழஞ்சு - 1 கஃசு
4 கஃசு - 1 பலம்

அளவைகள் - நீட்டலளவு

10 கோன் - 1 நுண்ணணு
10 நுண்ணணு - 1 அணு
8 அணு - 1 கதிர்த்துகள்
8 கதிர்த்துகள் - 1 துசும்பு
8 துசும்பு - 1 மயிர்நுணி
8 மயிர்நுணி - 1 நுண்மணல்
8 நுண்மணல் - 1 சிறுகடுகு
8 சிறுகடுகு - 1 எள்
8 எள் - 1 நெல்
8 நெல் - 1 விரல்
12 விரல் - 1 சாண்
2 சாண் - 1 முழம்
4 முழம் - 1 பாகம்
6000 பாகம் - 1 காதம்(1200 கெசம்)
4 காதம் - 1 யோசனை

இறங்குமுக இலக்கங்கள்

1 - ஒன்று
3/4 - முக்கால்
1/2 - அரை கால்
1/4 - கால்
1/5 - நாலுமா
3/16 - மூன்று வீசம்
3/20 - மூன்றுமா
1/8 - அரைக்கால்
1/10 - இருமா
1/16 - மாகாணி(வீசம்)
1/20 - ஒருமா
3/64 - முக்கால்வீசம்
3/80 - முக்காணி
1/32 - அரைவீசம்
1/40 - அரைமா
1/64 - கால் வீசம்
1/80 - காணி
3/320 - அரைக்காணி முந்திரி
1/160 - அரைக்காணி
1/320 - முந்திரி
1/102400 - கீழ்முந்திரி
1/2150400 - இம்மி
1/23654400 - மும்மி
1/165580800 - அணு
1/1490227200 - குணம்
1/7451136000 - பந்தம்
1/44706816000 - பாகம்
1/312947712000 - விந்தம்
1/5320111104000 - நாகவிந்தம்
1/74481555456000 - சிந்தை
1/489631109120000 - கதிர்முனை
1/9585244364800000 - குரல்வளைப்படி
1/575114661888000000 - வெள்ளம்
1/57511466188800000000 - நுண்மணல்
1/2323824530227200000000 - தேர்த்துகள்

ஏறுமுக இலக்கங்கள்

1 = ஒன்று -one
10 = பத்து -ten
100 = நூறு -hundred
1000 = ஆயிரம் -thouand
10000 = பத்தாயிரம் -ten thousand
100000 = நூறாயிரம் -hundred thousand
1000000 = பத்துநூறாயிரம் - one million
10000000 = கோடி -ten million
100000000 = அற்புதம் -hundred million
1000000000 = நிகர்புதம் - one billion
10000000000 = கும்பம் -ten billion
100000000000 = கணம் -hundred billion
1000000000000 = கற்பம் -one trillion
10000000000000 = நிகற்பம் -ten trillion
100000000000000 = பதுமம் -hundred trillion
1000000000000000 = சங்கம் -one zillion
10000000000000000 = வெல்லம் -ten zillion
100000000000000000 = அன்னியம் -hundred zillion
1000000000000000000 = அர்த்தம் -?
10000000000000000000 = பரார்த்தம் —?
100000000000000000000 = பூரியம் -?
1000000000000000000000 = முக்கோடி -?
10000000000000000000000 = மஹாயுகம் -????????????????

Wednesday 31 August 2011

மரணதண்டனை ஏன் கூடாது?






மரணதண்டனை ஏன் கூடாது?
கடந்த சில நாட்களாக இனையதளங்களில் சிலர் மரணதண்டனையை ரத்து செய்தால் நாட்டில் தீவிரவாதம் தலைதூக்கும் என்றும் அனைத்து மரணதண்டனைகளையும் நிறுத்த வேண்டியிருக்கும் என்றும்அதனால் முருகன்,சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோரின் மரணதண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.அவர்களுக்கு சில விளக்கங்களை தரவேண்டியிருக்கிறது.
=> முதலில்,மரணம் ஒரு தண்டனையா? மரணம் ஒரு தண்டனை என்றால் பிறகு நாட்டில் ஏன் இத்தனை தற்கொலைகள் நடக்கின்றன.இந்த உலகில் மரணத்தை விட கொடிய பிரச்சனைகளை சந்திக்கிறோம்.இதை விட மரணமே பரவாயில்லை என்று நினைப்பதால் தானே தற்கொலை செய்து கொள்கின்றனர்.அப்படி இருக்க மரணம் எப்படி தண்டனையாகும்.
=> இரண்டாவது,ஒரு கொலைக்குற்றம் செய்தவனுக்கு மரணதண்டனை என்றால் அதுவும் ஒரு கொலைதானே.அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டு நாள் குறித்து செய்யப்படும் ஒரு திட்டமிட்ட கொலையாகும்.அதாவது குடிமக்கள் கொலை செய்தால் தவறு.அதையே அரசு செய்தால் தவறில்லை என்று தானே அர்த்தம்.அப்புறம் அரசாங்கத்திற்கும் கொலைகாரர்களுக்கும் என்ன வித்தியாசம்?
நாம் மரணதண்டனை தான் கூடாது என்று சொல்கிறோமே தவிர தண்டனையே கூடாது என்று சொல்லவில்லையே! அதற்கு பதிலாக வேறு வித்தியாசமான தண்டனைகள் தரலாமே.உதாரனத்துக்கு குற்றமிழைத்தவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து அதை அரசாங்கமே ஏலம் விட்டு அதனால் கிடைக்கும் பணத்தை பாதிக்கப்பட்டவருக்கு கொடுக்கலாமே.இதை சிறை தன்டனையோடு சேர்த்துக்கொள்ளலாமே.இதனால் பாதிக்கப்பட்டவருக்கும் ஒரு நிவாரனம் கிடைக்குமே!
அதனால் தான் சொல்கிறோம் மரணதண்டனை கூடாது என்று.ஆனால் சில விஷமிகள் நாம் தன்டனையே கூடாது என்று சொல்லவதைபோல ஒரு தவறான கருத்துக்களை இனையதளங்களில் பரப்பிவருகின்றனர்.அதற்கு ஒரு பதில் கொடுக்க வேண்டுமே என்பதற்க்காகத்தான் இந்த விளக்கம்.

முருகன்,சாந்தன்,பேரறிவாளன் விவகாரம்:
முருகன்,சாந்தன்,பேரறிவாளன் ஆகிய இந்த மூவரும் நேரடியாக கொலையில் சம்மந்தப்பட்டவர்கள் அல்ல.நேரடியாக கொலையில் சம்மந்தப்படாதவருக்கு மரண தண்டனை கொடுக்கக்கூடாது. இவற்றயெல்லாம் தான்டிய பல விடயங்கள் உள்ளது.
ராஜீவ்காந்தியை கொலை செய்ய பயன்படுத்தியதாக சொல்லப்படும் பெல்ட் வெடிகுன்டை செய்தவனை இன்னும் சி.பி. கன்டுபிடிக்கவில்லை. ஒருவேளை நாளை கன்டுபிடிக்கப்பட்டால் அப்போது இந்த மூவரில் ஒருவரை சாட்சியாக கோர்ட்டில் நிறுத்தவேண்டுமே.அப்போது செத்தவனை எழுப்பிக்கொன்டு வந்தா சாட்சி சொல்ல வைப்பார்கள். அப்படியிருக்க அவசர அவசரமாக தூக்கில் போடுகிறார்கள் என்றால் எதையோ மறைக்கிறார்கள்,யாரையோ காப்பாற்ற முயல்கிறார்கள் என்றுதானே அர்த்தம் கொள்ளவேன்டியிருக்கிறது.இதற்கு இன்னமும் அரசு ஒரு சரியான விளககத்தை கொடுக்கவில்லையே.
இந்த விஷமிகளின் இன்னொரு சொத்தை வாதம்,இவர்களை விட்டால் நாளை எல்லோரையும் விடச்சொல்லி போராட்டம் நடத்துவார்கள்.எல்லோரையும் விட வேண்டியிருக்கும் என்கிறார்கள்.எல்லோருக்கும் ஒரு மாநிலத்தின் ஒட்டு மொத்த மக்களும் சேர்ந்து போராட மாட்டார்கள் என்பதை இவர்களுக்கு யாராவது சொன்னால் தேவலை.இவர்கள் எந்த குற்றமும் செய்யவில்லை என்று மக்கள் நினைக்கிறார்கள்.அந்த அளவுக்கு இந்த வழக்கில் பல ஓட்டைகள உள்ளது.அதனால்தான் ஒட்டுமொத்த தமிழ்மக்களும் ஒன்றினைந்து போராடினார்கள்.
நிலைமை இப்படி இருக்க இவர்கள்தான் ஏதோ நீதியை நிலைநாட்ட வந்தவர்கள் போலவும் மற்றவர்களெல்லாம் கொலைகாரர்களுக்கு வக்காலத்து வாங்குவது போலவும் எழுதிவருகிறனர்.
இதைப்படிக்கும் நண்பர்கள் இந்த் விளக்கம் சரி என்றால் உங்கள் நண்பர்களிடம் பரப்புங்கள். இவை தவறு என்றால் சரியான உங்களின் கருத்துக்களோடு மறுப்பு எழுதிங்கள்.

முகவரி: ksrameshodc@gmail.com

Friday 1 July 2011

SriLanka's Killing Fields

SriLanka's Killing Field-A Documentary Released By Channel-4 of London . It shows the Real Face & War crimes of the Srilankan Army.Who gave them the Permission to Rape the Women arguing that they are LTTE members??????? Okay let them be terrorists only. But which International Law has given permission to Rape,Make nude & Pass vulgar comments on those girls.Is that acceptable?
If this is the case then there is no difference between a responsible army & a terrorist organisation. Then we have to call Srilankan Army as a terrorist organisation who got power through democratic means(by cheating people & getting Votes by a various means).

Let us support the UNO in investigating & punishing those war criminals.Pls download this video to your mobile & Show/distribute to your friends,Collegues etc...It is in 3GP format so that it can be viewed on all mobiles.
I have a copy of the Video.Pls contact ksrameshodc@gmail.com  to get the video in Mpg format

Monday 6 June 2011

குமரிக்கண்டம்

                                             குமரிக்கண்டம்

       
                
             குமரிக்கண்டம் என்ற பெயரை கேட்டதும் பலருக்கு தமிழ்நாட்டில் உள்ள கன்னியாகுமரி நினைவுக்கு வரும்.ஆனால் குமரிக்கண்டம் என்பதுவொரு கண்டமாகும். தமிழர்களின் தாயகமும் அதுதான்.பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னல் ஏற்பட்ட இரு கடற்கோள்களால் ஆழிவுடற்றது. இன்றைக்கு அந்த மாபெரும் கண்டம் இந்துமஹா சமுத்திரத்திற்குள் அமைதியாக மூழ்கி கிடக்கிறது.அழிந்து போன பாண்டிய மன்னர்களின் நாடும் அதுதான். குமரிக்கண்டம் பற்றி பல பண்டய தமிழ் இலக்கியங்களில் குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.

அந்த கண்டத்தில் குமரி ஆறு,பஹ்றுளி ஆறு,பெரு ஆறு மற்றும் கண்ணி ஆறு ஆகிய ஆறுகல் ஓடிக்கொண்டிருந்தன.அடியார்குனாளர் என்ற 12-ம் நூற்றாண்டை சேர்ந்த புலவர் அதை விளக்கியிருக்கிறார்.இந்த கண்டத்தில் மொத்தம் ஏழு நாடுகள் இருந்தன. ஒவ்வொன்றும் ஏழு உட்பிரிவுகளை கொண்டிருந்தன. அந்த ஏழு நாடுகளுக்கும் சேர்த்து தென் மதுரை தலை நகரமாக விளங்கியது.அந்த நாடுகள் கீழ்கண்டவையாகும்.
1.ஏழுதேங்காய் நாடு,
2.ஏழுமதுரை நாடு,
3.ஏழுமுன்பாலை நாடு,
4.ஏழுபின்பாலை நாடு,
5.ஏழுகுன்ற நாடு,
6.ஏழுகுனக்கரை நாடு,
7.ஏழுகுறும்பனை நாடு என்பனவாகும்.

இவை ஒவ்வொன்றும் ஏழு உட்பிறிவுகளை கொண்டிருந்தன.ஆக மொத்தமாக 49 மாகானங்களாகும்.
பொதிகை மலையிலிருந்து இமயமலை எவ்வளவு தொலைவு இருந்ததோ அதே அளவு தொலைவில் தெற்கு எல்லையும் இருந்தது.கனண்டத்தின் மத்தியில் மேருமலை என்றொரு மலை இருந்தது. அதில் இருந்து தங்கமும் மணியும் வெட்டி எடுக்கப்பட்டன.




The Submerged Pandya Kingdom